சுத்தமான பால் உற்பத்தி
கால்நடைவளர்ப்பில் கீரையின் பங்கு!!!
ஏன் கீரைகளைப் பயன்படுத்த வேண்டும்?
1. கீரைகளில் பல நுண்சத்துக்களும், உயிர்ச்சத்துக்களும் உள்ளன
2. எளிதில் உணவுகள் செரிமானம் ஆக உதவும்
3. கால்நடைகளில் குறிப்பாக குட்டிகளுக்கு இளம்வயதில் ஏற்பட்டும் வளர்ச்சி குறைபாடு, குடற்புழு தாக்கம், சத்துக்குறைபாடுகளை களைய உதவும்
4. சீரான உடல்வளர்ச்சி பெற உதவும்
5. சருமநோய், முடிஉதிர்தல், சொறி போன்ற தாக்கங்கள் கால்நடைகளில் குறையும்
6. முட்டையிடும் கோழிகள், வான்கோழிகள், வாத்துகளுக்கு முக்கிய பயன்களைத்தரும் - திறனான ஓடுகள், சத்தான கரு என முட்டைகளின் தரம் உயரும்
7. கால்நடைகளில் கருக்கூடாமை, கருவளர்ச்சியின்மை, பருவசுழற்சி கோளாறுகளை தீர்க்கவல்லது
8. எளிதில் வளர்க்கக்கூடிய பசுந்தீவன வகை - குறிப்பாக மரவகைக்கீரைகள்
9. அதிகளவில் உற்பத்திசெய்தால் இதரவருமானமாகவும் பயப்பெறலாம்
10. கோடைகால அயற்சியை குறைக்கலாம்
செடி வகைக்கீரைகள்:
1. கொத்தமல்லி கீரை
2. முளைக்கீரை
3. அரைக்கீரை
4. தண்டுக்கீரை
5. புளிச்சக்கீரை
6. கரிசலாங்கண்ணி கீரை
7. பாலக்கீரை
8. மணத்தக்காளிக் கீரை
9. பசலைக்கீரை
10. பொன்னாங்கண்ணிக்கீரை
மரவகைக் கீரைகள்:
1. கறிவேப்பிலை
2. முருங்கைக் கீரை
3. அகத்திக்கீரை
4. நச்சுக் கொட்டைக் கீரை
கீரைகளில் உள்ள சத்துக்கள்:
1. வைட்டமின் A-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin A)
அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்ககைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை
2. வைட்டமின் B-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin B)
கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை
3. வைட்டமின் C-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin C)
அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் இலை, கொத்தமல்லி
4. சுண்ணாம்பு சத்து (Calcium) அதிகம் இருக்கும் கீரைகள்
அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக்கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, நச்சுக் கொட்டைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பாலக்கீரை
5. இரும்புச் சத்து (Iron) குறைபாட்டிற்கு உதவும் கீரை வகைகள்
முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக்கீரை
6. எல்லா வைட்டமின் (Vitamin) சத்துக்களும் தாதுஉப்புக்களும் (Minerals) ஒருங்கே கொண்ட கீரை – தவசிக்கீரை
செடி வகைக்கீரை சாகுபடி
ஒரு சென்டிற்கு 10 முதல் 20 கிராம் விதை தேவைப்படும். (வகையைப்பொறுத்து)
ஒரு சென்டில் கீரை (வகையைப்பொறுத்து) 30 முதல் 40 கட்டுகள் அறுவடைசெய்யமுடியம்.
அறுவடைநாட்கள்: 25 முதல் 120 (கீரை வகையைப்பொறுத்து)
சுழற்சிமுறையில் 10 சென்டில் கீரை வளர்க்கும்போது வாரத்திற்கு ஓரிரு முறையிலிருந்து தினமும் ஒரு வகை கீரையை
கால்நடைகளுக்கு கொடுக்கமுடியும்.
நன்றி
கார்க்கி. ஆ
பண்ணையில் முதலுதவிப்பெட்டி
வேதிப்பொருள்கள்:
1. போவிடோன் ஐயோடின் (Povidone Iodine)
• சிறந்த கிருமிநாசினி
• புண் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
• பிறந்த கன்று குட்டியின் தொப்புள் கொடியை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது
2. டிஞ்சர் பென்சாயின் (Tincture Benzoin)
• கால்நடைகளில் கொம்பு உடைத்தல் போன்றவற்றால் ஏற்படும் அதீத இரத்தப்போக்கை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
• இதை அடிபட்டஇடத்தில் தடவி கட்டுத்துணியால் கட்டவும். இரத்தப்போக்கு கட்டுப்படும்.
• 5 மில்லி டிஞ்சர் பென்சாயினயை ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் கலந்து சளி, செருமல் இருக்கும் மாடுகளுக்கு வேதுபிடிக்க பயன்படுத்தலாம்.
3. போரிக் அமிலம் தூள் (Boric Acid Powder)
• கால்நடைகளில் ஏற்படும் காயங்களுக்கு இந்த தூளை வேப்பஎண்ணெய் சேர்த்து அதன்மேல் தடவலாம்.
• போலி பசுஅம்மை, வாய்க்கோமரி போன்ற நோய்களால் ஏற்படும் புண்களை குணமாக்க வல்லது.
4. எப்சம் உப்பு (MgSo4) - (Epsom Salt)
• இது வெளிமம் நாலுயிரகக்கந்தகம் (மக்னீசியம் சல்பேட்டு)
• கால்நடைகளில் முட்டிவீக்கம், உடலில் கல்லு போல வீக்கம் இருந்தால் அதன்மேல் இதனை தடவலாம்
5. கிளிசரின் (Glycerine)
• இதனை போரிக் அமிலம், அல்லது எப்சம் உப்புடன் கலந்து கால்நடைகளில் முட்டி வீக்கம், சீழ்க்கட்டி மேலே தடவலாம்.
• இதனை கால்நடைகளின் பால் மடியில் தடவக்கூடாது
6. சுண்ணாம்புத்துண்டு / நாமக்கட்டி (Chalk Piece)
• இதனை வினிகர் (அ) காடி உடன் கலந்து கால்நடைகளில் மடிவீக்கத்துக்கு முதலுதவியாக தடவலாம்.
7. பொட்டாசியம் பெர்மாங்கனேட் (Potassium
Permanganate):
• இது சாம்பரம் நாலுயிரகமங்கனம் எனப்படும்
• சிறந்த கிருமிநாசினி - கொட்டகைத்தரைகள், தீவனத்தொட்டிகள், பால்கறவை இயந்திரங்கள், கைகால்கள், கால்நடைகளின் மடி, குளம்புகளை சுத்தம் செய்ய சிறந்த கிருமிநாசினி
• மடிநோய் வராமல் தடுக்க மாட்டின் மடியைக்கழுவ இதனை பயன்படுத்தலாம்.
• நஞ்சுக்கொடியைசரியாக போடாத மாடுகளில் கழிவுவெளியேற்றும் போது வரும் துர்நாற்றத்தை தடுக்க பயன்படுத்தலாம்.
8. டர்பென்டின் எண்ணெய் (Turpentine oil)
• இதனை காயத்தில் உள்ள புழுக்களை வெளியிலெடுக்க பயன்படுத்தலாம்.
இயற்கைப்பொருள்கள்:
இயற்கைப் பொருள்கள் |
பயன்பாடு |
1. வேப்பஎண்ணெய் |
எந்தவகை காயங்கள்மேலும் இதனை தடவலாம்.
ஈ, கொசு போன்றவை காயத்தை அரிக்காமல், புழுவைக்காமல் காக்கும். |
2. மஞ்சள்தூள் |
சிறந்த இயற்கை கிருமிநாசினி. இதனை வேப்பஎண்ணெய்யுடன்
சேர்த்து தடவலாம் |
3. பச்சைக்கற்பூரம் |
காயங்களில் புழு வைத்துவிட்டால், இயற்கைமுறையில்
அதனை வெளியெடுக்க பச்சைக்கற்பூரம், வேப்பெண்ணை, மஞ்சள்தூளை காயத்தில் தடவினால் புழுக்கள் வெளியேறும். |
உபகரணங்கள்:
1. பஞ்சு சுருள்கள்
2. பஞ்சு வலைக்
கட்டுத்துணிகள்
3. அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்
4. அறுவை சிகிச்சை இடுக்கி (Forceps) - புழுக்களை எடுக்க
பயன்படுத்தலாம்
தொகுப்பு:
- கார்க்கி. ஆ, B.E, M.A
தேர்வு
பயிற்சியாளர் / Exam Trainer & Mentor
கால்நடை வளர்ப்பில் மரங்களின் பங்கு!!!
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால்" குறள் 217 மரத்தின் பெருமையை விளக்கவல்லது. ஒரு நல்ல மரமானது நன்கு வளர்ந்ததும் இலை, காய், பட்டை, வேர், பழம் எனப் பலவகையாலும் மக்களின் பிணிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. இவ்வகையாக மரங்கள் கால்நடைவளர்ப்பில் கீழ்கண்ட பங்கினை அளிக்கிறது.
1.
உயிர் வேலி:
உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும்.
மரங்கள் பண்ணைகளுக்கு நல்ல ஒரு உயிர்வேலியாக அமைகிறது. கிளுவை, ஈச்சை, கொடுக்கா புள்ளி போன்ற மரங்களை வேலிக்காக பயன்படுத்தலாம். இதனால் வெளியாட்கள், விலங்குகள் பண்ணையின் உள்ளே நுழைய இயலாது.
2.
கால்நடைத் தீவனம்:
மரங்கள் கால்நடைகளுக்கு ஒரு நல்ல துணைத்தீவனமாக அமைகிறது. அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, முருங்கை, கல்யாண முருங்கை போன்றவை பண்ணைகளில் வளர்க்கப்படும்போது நல்ல
சத்தான (புரதம், நார்ச்சத்து கொண்ட) பசுந்தீவனமாக
பயன்படுத்தப்படுகிறது.
மரங்கள் ஆண்டுப்பயிரானதால் பெருமளவு பசுந்தீவனச்செலவை குறைக்கமுடியும். மரங்களில் வாழும் பூச்சிகள், புழுக்கள் கோழிகளுக்கு நல்ல உணவாகும்.
3.
மேச்சலிடம்:
பண்ணையைச்சுற்றி மரங்கள் இருந்தால் கோழி, வாத்து, வான்கோழி, கிண்ணி கோழி, ஆடு போன்றகால்நடைகளுக்கு திறந்த வெளிவளர்ப்பில் உறுதுணையாக இருக்கும். முக்கியமாக பறவைவளர்ப்பில் அவற்றின் உணவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்திசெய்கிறது.
4.
காற்று தடுப்பான்:
சவுக்கு, மூங்கில், வேம்பு, மா போன்ற மரங்கள் நல்ல காற்று தடுப்பானாக செயல்படும். இதனால் பறவைகள் வளர்ப்பு, ஆடுவளர்ப்பில் குளிர்காற்றால் வரும் நோய்த்தாக்கம், பலத்த காற்றினால் பண்ணைகளுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கலாம்.
5.
பொருளாதார வைப்புநிதி:
தலைமுறைகளில் பண்ணையாளரின் பொருளாதாரத்தை மேம்படுத்த சந்தனம், செம்மரம், தேக்கு, மகோகனி போன்ற மரங்கள் முக்கிய பங்குஅளிக்கின்றன.
6.
நுண் வானிலை மாற்றம்:
அடர்மர வளர்ப்பில் பண்ணையின் தட்பவெப்ப மாற்றத்தை கொண்டுவரலாம். நுண் வானிலை (அ) தட்பவெப்ப மாற்றத்தை உருவாக்குவதால் பண்ணையில் மற்ற பயிர்கள், செடிகள் நாள் முறையில் வளர்ச்சியடையும். கால்நடைகளில் ஏற்படும் வெப்ப அயர்ச்சி, மன அழுத்தம் போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
7.
சத்தான பண்ணை உரம்
மரக்கழிவுகளான இலைகள், சருகுகள், பட்டைகள் மற்ற பண்ணை தொழுவுரத்தோடு சேர்க்கும் போது நல்ல சத்தான உரம் பண்ணையில் உற்பத்திசெய்யமுடியும்.
8.
மண்வளம் காப்பான்:
பண்ணையில் மண்வளத்தைக்காத்து, மழை வெள்ளத்தின் போது மண்ணரிப்பைத் தடுக்கவல்லது மரங்கள்.
9.
பல்லுயிர் பெருக்கம்:
பண்ணையில் பறவைகள், மற்ற ஊர்வன போன்றவற்றின் பெருக்கத்திற்கு மரங்கள் பெரும்பங்களிக்கின்றன. அதனால் எலிகள், உண்ணிகள், பூச்சிகள் கட்டுப்படுத்துதலில் இவைகளின் பங்கு மகத்தானது.
10.
அழகியல் மதிப்பு:
மரங்கள் பண்ணையின் அழகியல் மதிப்பைக்
கூட்டுவதால் அமைதியான சுற்றுசூழலை உணரவழிவகைசெய்யும். பானையில் முகப்பு, வழிப்பாதைகளில் பூமரங்கள், அலங்கார மரங்களை
வளர்க்கலாம்.
பண்ணையில் எழில்மிகு சோலையை உருவாக்குவதில் மரங்களின் பங்கு அளப்பரியது.
மரங்கள் எண்ணிக்கையை கணக்கிடுதல்:
எத்தனை மரங்களை நம் பண்ணையில் வளர்க்கலாம் என்பது அவரவர் சூழலைப்பொருத்தது. மரங்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது எப்படி என்பது கீழ்கண்ட விதிமுறையை பொறுத்தது.
நிலத்தில் மரங்களின் மதிப்பீடு = (நிலத்தில் அளவு) / [(வரிசைக்கு வரிசை இடைவெளி அடி) X (மரத்திற்கு மரம் இடைவெளி அடி)]
ஒரு ஏக்கரில் மரங்களின் மதிப்பீடு = 43,560 / (8 X 8) = 680
மரங்களை தேர்வுசெய்தல்:
மரங்களின் தேர்வு நிலத்தின் அமைப்பு, மண்ணின் தன்மை, நீர் ஆதாரத்தின் நிலை பொறுத்து அமையும். உள்ளூரில் வளரும் மரங்களை பயிரிடலாம், அல்லது வனத்துறை, வேளாண்துறைகளை அணுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் மரவகையைத் தேர்வு செய்யலாம்.
குறிப்பு:
கொட்டகை அருகே பலம் குறைந்த மரவகைகளை வளர்ப்பதை தவிர்க்கவும், அவை பலத்தகாற்றில் முறிந்து விழும் அபாயம் இருப்பதால் நல்ல வலுவான மரங்களை (புங்கு, வேம்பு போன்ற) அருகில் வளர்க்கலாம்.
வேகமாக வளரும் தன்மையுடைய மரங்கள், பலம் குறைந்த தண்டுகளைக் கொண்டுள்ளது.
நன்றி
தகவல்
மடி நோய் எத்தனை நாட்களில் குணமாகும்????
கால்நடைகளுக்கு ஏன் உப்பு சத்து அவசியம்???
இயற்கையாகவே மாடுகள் உப்பு சுவை கொண்ட தாவரங்களை விரும்பி உண்கின்றன இது அதன் உணவுப் பையிலுள்ள செரிமானத்தை அதிகரிக்கிறது.
அசைபோடும் விலங்குகளான மாடுகள் ஒரு நாளைக்கு 150 லிட்டர் உமிழ்நீர் சுரக்கின்றது இது அது உண்ணும் தாவரங்களை ஜீரணிக்க பெரிதும் உதவுகிறது.
உப்பு கலந்த தீவனத்தை மாடுகள் அருந்தும் போது அவை அதை மிகவும் விரும்பி உண்கின்றன இது உமிழ்நீர் உற்பத்தியை சீராக்கி செரிமானத்திற்கு உதவுகிறது
சோடியம் உடலில் அதிக அளவு சேமிக்கப்படுவதில்லை. அதனால் தினமும் உப்பு சிறிதளவு தீவனத்தில் கலந்து கொடுப்பதால் மாடுகளின் ஆரோக்கியம் பெருகும்
சத்துக்குறைபாடு தொடர்பான தகவல்கள்
அமர் நிலையில் இருக்கும் பசுக்களைப் பராமரிப்பது எப்படி???
ஆடுகளில் வயிறு உப்பிசம்
ஆடுகளில் வயிறு உப்பிசம் வர காரணம்
1. அரிசி மற்றும் அரசி சார்ந்த பொருட்களை உண்ணுதல்
2. உணவு பையன் பாதையில் அடைப்பு ஏற்படுதல்
3. தகாத தீவனம் மற்றும் உணவுக் கழிவுகளை உண்ணுதல்
ஆடுகளைப் பொறுத்தவரை வயிறு உப்பிசம் ஒரு கொடிய நோய் உடனடியாக மருத்துவரை அழைப்பது சிறந்த வழி.
முதலுதவியாக ஆப்ப சோடா மாவு ஒரு கைப்பிடி அளவு கால் லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.